12 January 2026

இலங்கை முன்னேற்றத்திற்கான சரியான பாதையில் செல்கின்றமை குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நம்பிக்கை

Commencement-work

இலங்கைக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மேற்கொண்ட குறுகிய விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (12/01) சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வாங் யியுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை நடத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்துவதையும், மூலோபாய கூட்டுறவுசார் பங்குடமையை மேம்படுத்துவதையும் இச்சந்திப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது. ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து பல நூற்றாண்டுகளாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டு வரப்படுகின்ற ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், காலத்தால் என்றும் மாற்றமடையாத ஒத்துழைப்பையும் இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் கூட்டாண்மையை மேம்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

தித்வா சூறாவளிக்குப் பிறகு இலங்கைக்கு வழங்கப்பட்ட உறுதியான ஆதரவிற்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அமைச்சர் ஹேரத் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம், இடமாற்றம் மற்றும் மறுசீரமைப்புக்கு, குறிப்பாக அடையாளம் காணப்பட்ட சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கு மேலும் ஆதரவைக் கோரினார். இவை இணைப்பு, பொருளாதார மீட்சி மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. இந்த முயற்சிக்கு சீனாவின் முழுமையான ஆதரவை அமைச்சர் வாங் உறுதியளித்தார். மேலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை அதன் விரைவான மீட்சியைத் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அரசாங்கத்தின் மக்கள் மையக் கொள்கைகளையும் அவர் பெரிதும் வரவேற்றார். மேலும், இலங்கை அதன் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சரியான பாதையில் செல்கிறது என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.

சர்வதேச மன்றங்களில் சீனாவின் ஆக்கபூர்வமான பங்கிற்கு அமைச்சர் ஹேரத் நன்றி தெரிவித்தார். மேலும், ஒரே சீனா கொள்கை, சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான இலங்கையின் உறுதியான ஈடுபாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

2025 ஆம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் சீனாவிற்கு மேற்கொண்ட விஜயங்கள் உட்பட சமீபத்திய காலங்களில் வெற்றிகரமான உயர் மட்ட பரிமாற்றங்களை இரு அமைச்சர்களும் நினைவு கூர்ந்தனர்.

இச்சந்திப்பின் போது, ஹம்பாந்தோட்டையில் உள்ள சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இறுதி செய்யப்படும் என்று அமைச்சர் ஹேரத் தெரிவித்தார். 2027 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 70 வது ஆண்டு நிறைவை கூட்டாகக் கொண்டாடவும் இரு தரப்பினரும் இணங்கினர்.

சீன மக்கள் குடியரசின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மியாவ் தேயு, இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ ஜென்ஹோங் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

 

Chinese Foreign Minister Wang Yi expresses optimism that Sri Lanka is on the right path to progress-1

 

Chinese Foreign Minister Wang Yi expresses optimism that Sri Lanka is on the right path to progress-2

 

Chinese Foreign Minister Wang Yi expresses optimism that Sri Lanka is on the right path to progress-3

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2026  ஜனவரி 2026