Ministry News
கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு- இலங்கை மற்றும் செயிண்ட் ஜோன்ஸிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் பார்பியூடா அலுவல்கள் அமைச்சு- ஆண்டிகுவா மற்றும் பார்பியூடா ஆகியவை 2025 அக்டோபர் 3 அன்று வெளியிடும் உத்தியோகபூர்வ கூட்டு அறிவித்தல் இலங்கைக்கும், ஆன்டிகுவா மற்றும் பார்பியூடாவிற்கும் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவுதல்
வெளியிடப்பட்ட தேதி

கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு- இலங்கை மற்றும் செயிண்ட் ஜோன்ஸிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் பார்பியூடா அலுவல்கள் அமைச்சு- ஆண்டிகுவா மற்றும் பார்பியூடா ஆகியவை 2025 அக்டோபர் 3 அன்று வெளியிடும் உத்தியோகபூர்வ கூட்டு அறிவித்தல் இலங்கைக்கும், ஆன்டிகுவா மற்றும் பார்பியூடாவிற்கும் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவுதல்

ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மேதகு மஹிந்த சமரசிங்க மற்றும் அமெரிக்காவிற்கான ஆன்டிகுவா மற்றும் பார்பியூடாவின் தூதுவர் மேதகு சர் ரொனால்ட் சேண்டர்ஸ் ஆகியோரால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபர் ​03 அன்று வொஷிங்டன் டி.சி.யில், இலங்கை அரசாங்கமும், ஆன்டிகுவா மற்றும் பார்பியூடா அரசாங்கமும் இரு நாடுகளுக்கும் இடையே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜதந்திர உறவுகளை நிறுவியுள்ளன.

இலங்கைக்கும் ஆன்டிகுவா மற்றும் பார்பியூடாவிற்கும் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவுவதானது, இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக அரசியல், சமூக-பொருளாதார மற்றும் கலாசாரத் துறைகளில் தற்போதுள்ள நட்புறவுகளையும், ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தும்.

வெளிநாட்டு அலுவல்கள், ​வெளிநாட்டு வேலைவாய்ப்பு ​அமைச்சு           
கொழும்பு- 01         

வெளிநாட்டு அலுவல்கள்​  வர்த்தகம் மற்றும் பார்பியூடா அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுசெயிண்ட் ஜோன்ஸ்
​2025 ஒக்டோபர் 03