Minister Statement
2025 நவம்பர் 04 அன்று, புனித பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகருடன் நடைபெற்ற செயற்பாட்டுச் சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை
வெளியிடப்பட்ட தேதி
Celebrating Half a Century of Sri Lanka–Holy See Friendship

புனிதப் பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர்,

மேதகு பேராயர் போல்ல் ரிச்சர்ட் கல்லாகர் அவர்களே,

ஊடக உறுப்பினர்கள்/நண்பர்களே,

இன்று இந்த அமைச்சில், மேன்மைதங்கிய பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகரை வரவேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

இவ்விஜயமானது, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும், புனித பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 வது ஆண்டு நிறைவைக் குறித்து நிற்கும் முக்கியமானதொரு நிகழ்வாகும். இது நாம் பெருமையுடன் கொண்டாடும் ஐந்து தசாப்த கால நட்பு, ஒத்துழைப்பு மற்றும் அமைதி, மனித அபிவிருத்தி மற்றும் சமூக நீதிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் முக்கியமானதொரு மைல்கல்லாக விளங்குகிறது. இந்த உயர் மட்ட ஈடுபாடானது, நமது நெருங்கிய உறவுகளையும், எதிர்கால ஆண்டுகளில் இந்த கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான நமது பரஸ்பர விருப்பத்தினையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

புனித பீடம் நீண்ட காலமாக உலக அரங்கில் தார்மீகக் குரலொன்றாக இருந்து வருகிறார்; நீதி, சமரசம், அமைதி மற்றும் ஆயுதக் குறைப்பு மற்றும் அனைத்து மக்களின் உரிமைகள், இலங்கை மக்களின் அபிலாஷைகளுடன் ஆழமாக எதிரொலிக்கும் மதிப்புகள் ஆகியவற்றை ஆதரிக்கும் தார்மீகக் குரலொன்றாக இருந்து வருகின்றது.

கடந்த ஐந்து தசாப்தங்களாக, நமது உறவுகள், குறிப்பாக மனிதாபிமான சேவை, கல்வி, மத நல்லிணக்கம் மற்றும் மனித கண்ணியத்தை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் பகிரப்பட்ட மதிப்புகளால்  ஆதரிக்கப்பட்டு வருகின்றன. கத்தோலிக்க திருச்சபை இலங்கையின் மத மற்றும் சமூக நிலப்பரப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளதுடன், குறிப்பாக மோதலுக்குப் பிந்தைய சூழல்களில், தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

1970 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை ஆறாம் பவ்ல், 1995 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை இரண்டாம் ஜோன் போல் மற்றும் 2015 ஆம் ஆண்டு புனித திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைகளையும் நாங்கள் ஆழ்ந்த நன்றியுடன் நினைவு கூர்கிறோம். இவை ஒவ்வொன்றும் நமது மக்களின் இதயங்களில் நீடித்ததொரு செல்வாக்கை ஏற்படுத்தி, நமது நாடுகளுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தின.

தனிப்பட்ட முறையில், 2025 ஏப்ரல் 26 அன்று மறைந்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வத்திக்கானுக்கு நான் சமீபத்தில் மேற்கொண்ட விஜயத்தை துக்கத்துடனும், பயபக்தியுடனும் நினைவு கூர்கிறேன். அப்புனிதமான சந்தர்ப்பம் உலகில் புனிதத் திருச்சபையின் நீடித்த தார்மீகக் குரலையும், நமது இருதரப்பு உறவுகளின் வலிமையையும் நினைவூட்டுவதாக இருந்தது. அவரது மதிப்பிற்குரிய தலைமையின் கீழ் புனிதத் திருச்சபையுடனான நமது ஈடுபாட்டை வலுப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, திருத்தந்தை பதினான்காம் லியோவுக்கு எனது பணிவான மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று, நமது இராஜதந்திர உறவுகளின் பொன் விழாவைக் கொண்டாடும் வேளையில், இலங்கைக்கும் புனித பீடத்திற்கும் இடையிலான பன்முக ஈடுபாட்டை, குறிப்பாக மதம், கல்வி, சுகாதாரம், மதங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் பெருமையுடன் பிரதிபலிக்கிறோம்.

இலங்கை-வத்திக்கான் உறவுகளில் ஒரு பாலமாகச் செயற்படும் கத்தோலிக்க சமூகத்தின் நீடித்த ஆதரவையும், பங்களிப்பையும் குறிக்கும் வாய்ப்பாக நான் இந்நிகழ்வை கருதுகிறேன். இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, தேசத்தைக் கட்டியெழுப்புதல், சமூக ஒற்றுமை, சமூக சேவைகள் மற்றும் நாட்டில் ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கான சேவை சார்ந்த பணிகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. பல்லின அமைப்பைக் கொண்ட கத்தோலிக்கச் சமூகம், அனைத்து சமூகங்களிடையேயும் பரவலாக மதிக்கப்படும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்றைய கலந்துரையாடல்களின் போது, கடந்த ஐந்து தசாப்தங்களாக புனிதபீடமானது இலங்கைக்கு வழங்கிய உதவியைப் பாராட்டவும், நமது பன்முக இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் வாய்ப்பொன்றாக இந்நிகழ்வை நான் பயன்படுத்திக் கொண்டேன்.

கடந்த ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல், நமது மக்களிடையே உண்மையான நல்லிணக்கத்தை உறுதி செய்தல், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுதல், நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நமது அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்காக, பேராயர் கல்லாகர் அவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்கள் வாய்ப்பாக அமைந்தன.

நீண்ட அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழுமையை நோக்கிய பயணத்தை இலங்கை தொடர்ந்து மேற்கொள்ளும் வேளையில், அனைத்து சமூகங்களுக்கும் உரையாடல், உள்ளடக்கம் மற்றும் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான பங்குகொள்ளும் தரப்பாகவும், உறுதியான ஆதரவாளராகவும், புனித பீடத்தை நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக சுற்றுச்சூழல் நிலைபேறான தன்மை மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதற்கு நாங்கள் ஆவலுடனுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையிலும், பல்தரப்பு மன்றங்களிலும் பகிரப்பட்ட ஆர்வமுள்ள விடயங்களில் புனிதபீடத்துடன் நெருக்கமாக ஒத்துழைக்க இலங்கை தயாராக இருப்பதாகவும் நாங்கள் தெரிவித்தோம்.

புனிதப் பீடத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான சிறந்த உறவுகள் தொடர்ந்து செழித்து, அதிக புரிதலை ஊக்குவிப்பதுடன், இலங்கை மக்களின் பொது நலனுக்கு சேவை செய்யும் விதமாக அமையும் என்று நாம் பெரிதும் நம்புகிறோம்.

நன்றி

Statement to the Media by the Hon. Minister of Foreign Affairs, Foreign Employment & Tourism of Sri Lanka Vijitha HerathStatement to the Media by the Hon. Minister of Foreign Affairs, Foreign Employment & Tourism of Sri Lanka Vijitha HerathStatement to the Media by the Hon. Minister of Foreign Affairs, Foreign Employment & Tourism of Sri Lanka Vijitha Herath