கிழக்கு ஆசியாவிலும் பசுபிக் பிராந்தியத்திலும் உள்ள நாடுகளுடன் இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு இப்பிரிவு பொறுப்பாகவுள்ளது. பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு பங்களிக்கும் முன்முயற்சிகளை ஆதரித்தல், மூலோபாய பங்குடமைகளை அபிவிருத்தி செய்தல், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை எளிதாக்குதல் போன்ற இலங்கையின் நலன்களை முன்னேற்றுவதில் இப்பிரிவு ஈடுபட்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் சீனா, ஜப்பான், கொரியா குடியரசு மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, மொங்கோலியா ஆகிய நாடுகள் அடங்கும். இப்பிரிவானது, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் பங்குடமைமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
பசுபிக் பிராந்தியம் (ஓசியானியா) என்பது; அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பீஃஜி, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், வனுவட்டு மற்றும் சமோஆ ஆகிய பசிபிக் தீவு நாடுகளின் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இப்பிரிவானது, வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மூலமாக, அந்நாடுகளுடனான இலங்கையின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக இப்பிரிவு செயற்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), பாலி செயன்முறை மற்றும் சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு அமைப்பு (INBAR) போன்ற பிராந்திய அமைப்புகளுடன் உறவுகளைப் பேணும் பணியும் இப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

