பாரம்பரிய நகரமான பொலன்னறுவை, பாரம்பரியமிக்க சிகீரியா நகரம் மற்றும் புனித நகரான அனுராதபுரம் போன்ற இலங்கையின் மூன்று கலாச்சாரத் தளங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டன.
இன்று, தம்புள்ளை தங்க விகாரை(1991), காலியின் பழைய நகரம் மற்றும் அதன் வலுவூட்டல்கள்(1988) மற்றும் புனித கண்டி நகரம் (2010) ஆகியவையும், இலங்கையின் மத்திய மலைநாடுகள்(2010) மற்றும் சிங்கராஜா வனவளம்(1988) ஆகிய 2 இயற்கைத் தளங்கள் உள்ளடங்கலாக 6 கலாச்சாரத் தளங்கள் இப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டன.
1985 டிசம்பர் 8ஆந் திகதி டாக்கா நகரில் SAARC பட்டயமானது 7 உறுப்பினர்களுடன் கைச்சாத்திடப்பட்டதுடன், இதனூடாக பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வமைப்பின் ஸ்தாபக உறுப்பினராக இலங்கை காணப்படுகிறது.
1992 நவம்பர் மாதம் நெதர்லாந்துடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.

